Monday, 24 February 2020

ஆரூர்   திரும்பிய   சில   நாட்களுக்கு   பிறகு   சுந்தரருக்கு   மறுபடியும்   நண்பர்      நினைவு   வந்து   மறுபடியும்   சேரமானை   காண   கிளம்பினார்.   போகும் வழியில்    திருப்புக்கொளியூர்   என்ற   ஊரை    அடைந்தார் .   அங்கு   அவர்   ஒரு   அதிசய   காட்சியை   கண்டார் .   அங்கு   ஒரு   வீட்டில்   மேளதாள   ஒலியுடன்   சந்தோஷ   ஆரவாரமும்   அடுத்த    ஒரு   வீட்டில்   அழுகை   குரல்களும்   கேட்ட.ன ..   அதிர்ச்சி    அடைந்த   சுந்தரர்   தம்மை   காண   வந்த   அடியார்களிடம்    இதன்   காரணம்   வினவினார் .   அதற்கு    அவர்கள்   சென்ற   வருடம்   இரு   சமவயது   சிறுவர்கள்   குளிப்பதற்கு  மடுவிற்கு    சென்றனர் .  அதில்   ஒரு    சிறுவனை   முதலை   விழுங்கி   விட்டதாகவும்   பிழைத்த   மற்ற   சிறுவனுக்கு   அன்று   உபநயனம்   நடப்பதாகவும்   அதன்   காரணமாக   அந்த   வீட்டில்    வேத   ஒலியும்   நாயன   ஒலியும்    மகிழ்ச்சியின்    ஆரவாரம்   கேட்பதாகவும்    முதலைக்கு   இரையான    சிறுவனின்   வீட்டில்   அழுகை   ஒலி   கேட்பதாகவும்    கூறினர் .   அதை      கேட்ட   சுந்தரரின்   மனம்   பாகாய்   உருகியது .   ஈசனுக்கு   மிக   அருமையான   பக்தன்  சுந்தரரின்   வருகை   கேட்ட   ஊர்   ஜனங்கள்   அவரை   காண   வந்தனர் .             

No comments:

Post a Comment