சுந்தரரும் மனம் வருந்தி தன்னை மாய்த்துக்கொள்ள எத்தனித்தார் ஐயன் தம் ஆருயிர் தோழனை அப்படி விட்டு விடுவாரா ? கலிக்காமரை பிழைப்பித்து அவரே சுந்தரரை தடுத்து தன்னை மன்னிக்க வேண்டுகிறார் . எம்பிரான் சுந்தரரிடம் கொண்டுள்ள அளவிலா அன்பை புரிந்து கொண்டு கலிக்காமர் தன் அறியாமையால் சுந்தரரை தவறாக எண்ணியதை நினைத்து வருந்தி அவரிடம் மன்னிப்பு கோரினார் . இருவரும் நெருங்கிய நண்பர்களாயினர் . அவரும் சுந்தரருடன் ஆரூரில் தங்கி அருகிலுள்ள சிவாலயங்களை சேவித்து கொண்டு சில நாட்கள் கழித்து தம் ஊர் திரும்பினார் .
No comments:
Post a Comment