Saturday, 18 January 2020

சுந்தரரும்   மனம்   வருந்தி   தன்னை   மாய்த்துக்கொள்ள   எத்தனித்தார்   ஐயன்   தம்   ஆருயிர்   தோழனை   அப்படி   விட்டு   விடுவாரா ?    கலிக்காமரை    பிழைப்பித்து   அவரே   சுந்தரரை   தடுத்து   தன்னை   மன்னிக்க    வேண்டுகிறார் .  எம்பிரான்   சுந்தரரிடம்    கொண்டுள்ள   அளவிலா   அன்பை   புரிந்து   கொண்டு   கலிக்காமர்   தன்   அறியாமையால்   சுந்தரரை   தவறாக   எண்ணியதை   நினைத்து   வருந்தி   அவரிடம்   மன்னிப்பு    கோரினார் .  இருவரும்    நெருங்கிய   நண்பர்களாயினர் .  அவரும்    சுந்தரருடன்   ஆரூரில்   தங்கி   அருகிலுள்ள    சிவாலயங்களை   சேவித்து   கொண்டு   சில   நாட்கள்  கழித்து   தம்   ஊர்   திரும்பினார் .       

No comments:

Post a Comment