Friday, 21 February 2020

சுந்தரர்   மனம்   நொந்து   ஈசனிடம்   அவ்வாறு   வினவியதும்   கொள்ளை   அடித்த   அவ்வேடர்கள்   கொள்ளை   அடித்த    அத்தனை   பொருள்களையும்  கொண்டு  வந்து   அந்த    சன்னதியிலேயே    தம்பிரான் தோழரிடம்    ஒப்படைப்பித்தனர் .   சுந்தரரும்   அடியார்களும்    அதிசயித்து    போனார்கள் .அப்போது         ஈசன்   ''அன்பனே    எப்போதும்   என்னிடம்   மட்டுமே   பொருள்   பெற்று   வந்த   நீ   இப்போதும்   என்கையாலேயே   அப்பொருள்களை    பெற   வேண்டுமென்ற      எண்ணத்தால்   யாமே   இவ்வாறு    செய்தோம் ''   என்று   திருவாய்   மலர்ந்து   அருளினார் .  சுந்தரர்   அதை    கேட்டு    மெய்சிலிர்த்து   போனார் .  ஐயனின்  அன்பு     அவரை   பெரும்    மகிழ்ச்சிக்கு   உள்ளாக்கியது .   அவைகளை   பெற்றுக்கொண்டு   ஆரூர்   திரும்பினார் .       

No comments:

Post a Comment