Friday, 28 February 2020

சுந்தரர்   வரும்   செய்தி   கேட்ட    சேரமான்   எல்லை   இல்லா  மகிழ்ச்சி   அடைந்தார் .   அவருக்கு   அவர்   வரும்   வரை   காத்திருக்க   பொறுமை   இல்லை .  அவரை    வரவேற்க   அவர்   பாதி   வழி   சென்று   விட்டார் .  அவரை   கண்ட   சுந்தரருக்கும்   பெரும்    சந்தோஷம்   ஏற்பட்டது .   அவருடன்   தான்   சென்று   சேவித்த   அத்தனை    சிவபெருமான்   ஆலயங்களை   பற்றியும்   பேசி   மகிழ்ந்தார் .   அந்த   மலை   நாட்டில்   ஐயன்   குடி     கொண்டிருக்கும்   அத்தனை   க்ஷேத்திரங்களையும்    தரிசனம்   செய்து   கொண்டு   திரும்பினார்கள் .   சேரமான்   அரண்மனையில்   தங்கி    அவருடைய   உபசரிப்பில்   ஆனந்தமாக   நாட்கள்   சென்றன .   நண்பர்கள்   இன்பமாக    காலம்   கழித்தனர் .        

No comments:

Post a Comment