Monday, 24 February 2020

சுந்தரரின்   பெருமை   உணர்ந்த   அவ்வூர்   மக்கள்   அவரை   கண்டு   ஆசி   பெற   திரண்டு   வந்தனர் .  சுந்தரர்    குழந்தை   பறி   கொடுத்த   தம்பதிகளின்   நிலையை   நினைந்து    பாகாய்   உருக    அவர்களை   காண   ஆவல்   கொண்டார் .   அந்த   தம்பதியர்   வந்து   அவரை   பணிந்து   நமஸ்கரித்தனர் .   சுந்தரர்   பரிவுடன்   அவர்களை   பிள்ளையை   பறி   கொடுத்த   தம்பதிகள்   தங்களான ?  என்று   வினவினார் .  அதற்க்கு    அவர்கள்   ''சுவாமி    அது   நடந்து   முடிந்த   விஷயம் .  இப்போது   நாங்கள்   வெகு      நாளாய்   தங்களை   தரிசிக்க   ஆவல்    கொண்டிருந்தோம் .  இப்போது   கிடைத்தது .  எங்களை   ஆசீர்வதியுங்கள்   என்றனர் .   அதற்கு   சுந்தரர்   அவர்களிடம்  அந்த   மடுவை   காண்பிக்க   முடியுமா ?  என்று   கேட்டார் .      

No comments:

Post a Comment