Saturday, 29 February 2020

சேரநாட்டில்   சுந்தரர்   விருந்தினராக   இருந்த   போது   ஒருநாள்   திருவஞ்சைக்களம்   ஆலயம்   தொழ   சென்றார் .   அங்கு   ஐயனின்   கோலம்      கண்ட   அவருக்கு   மனம்   வாடி   போனது .   அவருக்கு    ஈசனை   பிரிந்து   வாழும்   வாழ்வு   கசந்தது .  மனம்   நொந்து   பிரார்த்தித்தார் .  ''ஐயா   இப்புவியில்   இன்னும்   எத்தனை   நாள்  வாழ   வேண்டும் ?  இந்த   சம்சார   பந்தத்திலிருந்து   என்னை   மீட்க   மாட்டியா ?  கரை   சேர்க்க   மாட்டாயா ?  என்னை   ஏற்றுக்கொள்ளுங்கள் .  என்று   மனமுருக   ''தலைக்கு   தலைமாலை   அணிந்ததென்னே ?  ''  என்று  பதிகம்   பாடி   கண்கலங்க   துதித்தார் .   உடனே   எம்பிரான்   மனமுருகி   போனார் .  ஆலால   சுந்தரர்   தன்னிடம்   வந்து   சேரும்   காலம்   நெருங்கி   விட்டதை   உணர்ந்தார் .  பிரமன்   மற்றும்    தேவர்களிடம்   ஆரூரனை   அழைத்து    வர   வெள்ளை   யானையை   அனுப்புமாறு   கேட்டுக்கொண்டார் .   ஈசன்    வேண்டுகோளை   செவிசாய்த்த    தேவர்கள்   வெள்ளை   யானையுடன்   அஞ்சைக்களம்    ஆலயத்தை   அடைந்தனர் .          

No comments:

Post a Comment