Friday, 24 January 2020

சுந்தரரும்   சேரமான்   பெருமானும்   மதுரையை   வந்தடைந்தனர் .  அப்போது    அங்கு   பாண்டியன்   மகளை   மணந்த   சோழ   மன்னனும்   வந்திருந்தார் .  அவர்கள்   இருவரும்   தம்பிரான்   தோழரும்   சேரமான்பெருமானும்   சேர்ந்து   மதுரை   வந்தடைந்த   செய்தியை   கேட்டு   மகிழ்ந்து   அவர்களை   எதிர்கொண்டு   அழைத்து   அவர் களுடன்   சேர்ந்து   ஆலவாய்   ஈசனை   ஒன்றாக   தரிசனம்   செய்து   மகிழ்ந்தனர் .  அவ்விருவரையும்   தம்   அரண்மனைக்கு   கோலாகலமாக   வரவேற்று   உபசரித்தனர்  .  சுந்தரரும்   சேராமானும்   பாண்டிய   அரண்மனையில்   சில    காலம்   தங்கி   மன்னரின்   உபசரிப்பை   ஏற்று   தங்கினர் .   அருகிலுள்ள   சிவாலயங்களை   தரிசித்தும்   மகிழ்ந்தனர் .           

No comments:

Post a Comment