Tuesday, 7 January 2020

சுந்தரர்   சில   பெரியோர்களை   அனுப்பி   சமாதானம்   செய்ய   கூறினார் .  அனால்   பரவையார்   அவர்   செய்த   குற்றம்   மன்னிக்க   தக்கதல்ல   என்று   கூறி   இனி   யாரும்   இவ்வாறு   வரவேண்டாம்   என்று   கண்டிப்பாக   கூறி   அனுப்பினார் .   சுந்தரர்   அளவிலா   வே  தனை   அடைந்தார் .  ''ஐயனே   நீ   இதுவரை   எல்லா   துன்பங்களிலிருந்தும்   என்னை   மீட்டிருக்கிறாய் .  நான் சங்கிலியாரை   மணந்து   கொண்டதை   பரவையார்   ஏற்கவில்லை.  உன்   விருப்பப்படி   தானே   நான்   அவளை   மணந்தேன் .  எனக்கு   நீயே   கதி .  பரவையார்   முன்போல்   என்னிடம்   அன்பு   செலுத்த    வைப்பது   உன்    பொறுப்பு ''.  என்று   இறைவனிடம்   மன்றாடினார் .   அவரும்   'கவலை   படாதே .  நானே  உன்  பொருட்டு   தூது   செல்கிறேன் . என்று   சமாதானம்   கூறினார் .  மகிழ்ந்தார்   சுந்தரர் . தன்   பக்தனுக்காக   அன்பே   உருவான   எம்பிரான்   தன்   தாமரையொத்த   பொற்பாதங்கள்   நோக   தேவர்   முனிவர்கள்   புடைசூழ   ஆரூர்   வீதியில்   நடந்தார் .     

No comments:

Post a Comment