இதற்குள் பரவைக்கு மனக்குழப்பம் ஏற்பட்டது . அர்ச்சகராக வந்தது சிவபெருமான் என்ற ஐயம் உண்டாயிற்று . அவர் சென்றதும் அங்கு சூழ்ந்த தெய்விக நறுமணம் காதில் ஒலித்த வேதகோஷம் இதெல்லாம் அவள் மனதில் சந்தேகத்தை எழுப்பியது . அவரின் பேரருள் பெற்ற சுந்தரருக்காக எம்பிரானே வந்திருப்பாரோ ? தவறு செய்து விட்டோமோ என்று அலை பாய்ந்தது . எதிர்த்து பேசியது பெரும் தவறு என்று மனம் பதறியது. அப்போது பரவை என்று ஈசன் அழைக்கும் குரல் கேட்க மனம் புல்லரிக்க பரவை ஓடிவந்து தாள் திறந்து அவர் பாதங்களில் விழுந்தாள் . உலகமனைத்தும் போற்றி தொழும் அப்பாதங்கள் இந்த ஆரூரனுக்காக வீதியில் கால் தேய நடந்து வந்தார் என்றால் அவர் பெருமையை உணராமல் உதாசீனம் செய்தது எத்தனை பாபம் என்று உணர்ந்த பரவை உடனே அவர் பின் சென்று அவருடன் இணைந்தாள் . இருவரும் சேர்ந்து ஆரூரில் சில காலம் மனமொத்து வாழ்ந்தனர் .
No comments:
Post a Comment