Wednesday, 5 February 2020

திருவாரூரில்   சுந்தரர்   சேரமானோடு   எம்பெருமானை   தினம்   சேவித்துக்கொண்டு   மகிழ்ந்து   கொண்டிருக்கும்    நாளில்   சேரமானார்   தான்   தம்   நாட்டைவிட்டு   கிளம்பி   வெகுநாட்கள்   ஆனதால்   திருப்பி   செல்ல   நினைத்தார் .  அவர்   சுந்தரரையும்   தம்முடன்   தம்   நாட்டிற்கு   தம்   விருந்தாளியாக   வரும்படி   வேண்டிக்கொண்டார் .   தம்   அரண்மனையில்   அவரை     உபசரிக்க   மிக்க   ஆவல்   தெரிவித்தார் .   சுந்தரரும்   அவர்     அன்பான   அழைப்பை   ஏற்றுக்கொண்டு   அவருடன்   கிளம்பினார் .   இருவரும்   காவிரியின்   தென்   கரையில்   கண்டியூர்   அடைந்தனர் .   அவ்வூரின்   வடகரை   திருவையாறு .   சேரமான்   ஐயாறப்பனை   தரிசிக்க   தன்   ஆவலை  தெரிவித்தார் .    சுந்தரரும்    சம்மதித்தார் .      

No comments:

Post a Comment