ஐயன் திரும்ப வந்தார் . சுந்தரர் மிக எதிர்பார்ப்புடன் சந்தோஷம் பொங்க அவரை எதிர்கொண்டு அழைக்க விரைந்தார் . '' சுந்தரா பரவை என்ன சொல்லியும் ஏற்க மறுத்து விட்டாள் . '' என்றார் . அதை கேட்ட சுந்தரர் இடி விழுந்தாற்போல் ஆனார் . சோர்வடைந்தார் . உரிமை கலந்த கோபம் எழுந்தது . ''சுவாமி உங்கள் பேச்சை கேட்க வில்லை என்று திரும்பி விட்டீ ர்களா ? அன்று த்ரிபுராந்தகர்கள் தங்கள் பேச்சை கேட்கவில்லை என்று அவர்களை விட்டு திரும்பினீர்களா ? மார்கண்டனை அழிக்க காலனை விட்டு திரும்பினீர்களா ? இந்த சுந்தரன்தானே என்ற அலட்சியமா ? இதற்காகவா என்னை தடுத்தாட்கொண்டீர் . இனி எனக்கு வாழ விருப்பமில்லை . '' என்று துக்கத்துடன் கூறினார் சுந்தரர் . நகைத்தவாறு எம்பெருமான் வருத்தப்படாதே சுந்தரா நான் முயற்சிக்கிறேன். என்று கூறி இந்த முறை மாறு வேடம் இல்லாமல் சுய தி.வ்ய சுயரூபத்துடன் புறப்பட்டார்
No comments:
Post a Comment