Wednesday, 15 January 2020

ஐயன்   திரும்ப   வந்தார் .  சுந்தரர்   மிக   எதிர்பார்ப்புடன்   சந்தோஷம்   பொங்க   அவரை   எதிர்கொண்டு   அழைக்க     விரைந்தார் .  ''  சுந்தரா   பரவை   என்ன   சொல்லியும்   ஏற்க   மறுத்து   விட்டாள் . '' என்றார் .   அதை   கேட்ட   சுந்தரர்   இடி   விழுந்தாற்போல்   ஆனார் .  சோர்வடைந்தார் .  உரிமை   கலந்த   கோபம்   எழுந்தது .   ''சுவாமி   உங்கள்   பேச்சை   கேட்க வில்லை   என்று   திரும்பி   விட்டீ ர்களா ?    அன்று   த்ரிபுராந்தகர்கள்   தங்கள் பேச்சை   கேட்கவில்லை   என்று   அவர்களை   விட்டு   திரும்பினீர்களா ?  மார்கண்டனை   அழிக்க   காலனை   விட்டு   திரும்பினீர்களா ?  இந்த   சுந்தரன்தானே   என்ற   அலட்சியமா ?  இதற்காகவா   என்னை   தடுத்தாட்கொண்டீர் .  இனி   எனக்கு   வாழ   விருப்பமில்லை .  ''  என்று   துக்கத்துடன்   கூறினார்   சுந்தரர் .  நகைத்தவாறு   எம்பெருமான்   வருத்தப்படாதே     சுந்தரா   நான்   முயற்சிக்கிறேன்.   என்று    கூறி   இந்த  முறை   மாறு   வேடம்   இல்லாமல்   சுய    தி.வ்ய   சுயரூபத்துடன்   புறப்பட்டார்                  

No comments:

Post a Comment