சுந்தரர் இறைவனை மீண்டும் வணங்கி ''ஐயனே என் நண்பன் சேரமான் பெ ருமானார் வாயிலேயே நிறுத்தப்பட்டார் . தயை கூர்ந்து அவருக்கும் கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன் '' என்று கேட்டுக்கொண்டார் . உடனே இறைவன் தம் கணங்களுக்கு அவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டார் . அவ்வாறே அவரை அழைத்து வந்தனர் . சேரமானார் வந்ததும் எம்பெருமான் காலில் விழுந்து வணங்கினார் . ஐயன் ' நாம் உன்னை அழைக்காதபோது எப்படி இங்கு வந்தாய் ' என்று வினவினார் . அதற்கு சேரமான் ''ஆரூரரை நான் வணங்கிக்கொண்டே வந்தேன் . தங்கள் அன்புமிக்க அடியார் மீது நான் கொண்ட பக்தி என்னை தங்கள் திருவடிகள் வரை கொண்டு சேர்த்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ? நான் தங்கள் மீது ஞான உலா ஒன்று பாடினேன் . அதை உங்கள் படிக்க உத்தரவு வேண்டுகிறேன் என்றார் .
No comments:
Post a Comment