சுந்தரரும் சேரமானாரும் காவிரியின் கரையை அடைந்தனர் . அனால் காவிரி வெள்ளம் கரைபுரண்டோடிற்று . ஓடம் ஒன்றும் செல்ல முடியாமல் கரையில் இருந்தன . அப்பனை தரிசிப்பது அசாத்தியம் என்று முடிவு செய்து சஞ்சலம் அடைந்தனர் . அப்போது சுந்தரர் ஐயனை மனதார வேண்டிக்கொண்டு ''பரவும் பரிசொன்று அறியேன்நான் '' என்று மனமுருக பதிகம் பாடினார் . ஐயாறப்பன் மனம் இரங்காமல் இருப்பாரா ? நதி வெள்ளத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது . மேற்கேயிலிருந்து வந்த நதிநீர் ஆணையிட்டது போல அப்படியே நின்றது . கிழக்கே தண்ணீர் வடிந்து மணற்பாங்காக காட்சி அளித்தது . சேரமான் சொல்லொணா ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்தார் . சுந்தரரை பாராட்டினார் . அதற்கு சுந்தரர் '' நண்பரே இது ஈசன் உமக்கு அளித்த வரமல்லவா '' என்று பதிலுரைத்தார் .
No comments:
Post a Comment