Tuesday, 25 February 2020

மகனை   பறி   கொடுத்த   நிலையிலும்   தம்மை   வணங்க   வந்த   அவர்கள்   மீது    சுந்தரருக்கு   அளவிலா   பரிவு   ஏற்பட்டது .   அவர்களுக்கு    உதவ   எண்ணம்   கொண்டார் .   அவர்களிடம்   தங்கள்   மகனை   விழுங்கிய   முதலை    வாழும்    மடுவை   காண்பிக்க   முடியுமா ?  என்று   கேட்டார்    அவர்கள்    ஊருக்கு   வெளியே   உள்ள    மடுவிற்கு   அவரை   அழைத்து   சென்றனர் .    சுந்தரர்   அங்கு   எம்பெருமானை    மனமுருக   அச்சிறுவனை   பிழைக்க   வைக்குமாறு   வேண்டிக்கொண்டார் .   உயிர்   நண்பன்   மனம்   உருக   பிரார்த்தனை   செய்யும்போது    ஆண்டவன்   சகித்து   கொள்வாரா?   உடனே   எம்பிரான்   யமதர்மனை   வேண்ட   காலதேவன்   அங்கு   வந்து   முதலையை   கரைக்கு   வரவழைத்து       முதலையை    அது    விழுங்கிய    அச்சிறுவனை      கரையில்    உமிழுமாறு    ஆணையிட்டான்  .   அவ்வாறே          முதலையும்       கரையில்        சிறுவனை   உமிழ்ந்து    சென்றது .  அச்சிறுவன்   கடந்த   ஒரு   ஆண்டு      வளர்ச்சியும்    பெற்றிருந்தான் .   பெற்றோர்   ஆனந்தம்   சொல்லவும்    வேண்டுமா?   ஆனந்த   வெள்ளத்தில்   அவர்கள்   சுந்தரரை   வலம்   வந்து     நமஸ்கரித்தனர் .   எல்லோரும்   ஆலயம்       சென்று   ஐயனை   நன்றி    பெருக்கோடு   வணங்கி    ஊர்   திரும்பினர் .       

No comments:

Post a Comment