மகனை பறி கொடுத்த நிலையிலும் தம்மை வணங்க வந்த அவர்கள் மீது சுந்தரருக்கு அளவிலா பரிவு ஏற்பட்டது . அவர்களுக்கு உதவ எண்ணம் கொண்டார் . அவர்களிடம் தங்கள் மகனை விழுங்கிய முதலை வாழும் மடுவை காண்பிக்க முடியுமா ? என்று கேட்டார் அவர்கள் ஊருக்கு வெளியே உள்ள மடுவிற்கு அவரை அழைத்து சென்றனர் . சுந்தரர் அங்கு எம்பெருமானை மனமுருக அச்சிறுவனை பிழைக்க வைக்குமாறு வேண்டிக்கொண்டார் . உயிர் நண்பன் மனம் உருக பிரார்த்தனை செய்யும்போது ஆண்டவன் சகித்து கொள்வாரா? உடனே எம்பிரான் யமதர்மனை வேண்ட காலதேவன் அங்கு வந்து முதலையை கரைக்கு வரவழைத்து முதலையை அது விழுங்கிய அச்சிறுவனை கரையில் உமிழுமாறு ஆணையிட்டான் . அவ்வாறே முதலையும் கரையில் சிறுவனை உமிழ்ந்து சென்றது . அச்சிறுவன் கடந்த ஒரு ஆண்டு வளர்ச்சியும் பெற்றிருந்தான் . பெற்றோர் ஆனந்தம் சொல்லவும் வேண்டுமா? ஆனந்த வெள்ளத்தில் அவர்கள் சுந்தரரை வலம் வந்து நமஸ்கரித்தனர் . எல்லோரும் ஆலயம் சென்று ஐயனை நன்றி பெருக்கோடு வணங்கி ஊர் திரும்பினர் .
No comments:
Post a Comment