சுந்தரர் ''தானெனை முன் படைத்தான் '' எனும் திருப்பதிகம் பாடியபடி திருக்கயிலாயம் தென் வாயிலை அடைந்தார் . அங்கே சேரமான் அவருக்காக காத்திருந்தார் . இருவரும் பல வாயில்களை கடந்து பிரதான வாயிலை அடைந்தனர் . அங்கு சேரமானை அனுமதிக்க மறுத்து விட்டனர் . சுந்தரர் கைலாயநாதர் சன்னதியை அடைந்தார் . அவர் காலில் விழுந்து சேவித்தார் . அன்பு மிகுதியால் கயிலை பதி ''ஆலால சுந்தரா வந்து விட்டாயா ?'' என்று நெஞ்சார வரவேற்றார் . அவரை நோக்கி மனமுருகி '' ஐயனே பாசவினைகளில் சிக்கி உழலாமல் என்னை காத்து என் தவறுகளை மன்னித்து என்னை தடுத்து ஆட்கொண்ட அண்ணலே உமது கருணையை எவ்வாறு போற்றுவேன்'' என்று ஆனந்த கண்ணீர் உகுத்தார் சுந்தரர் . .
No comments:
Post a Comment