Sunday, 12 January 2020

பரவையார்   மாளிகை   அடைந்ததும்   ஐயன்   தேவர்   முனிவர்களை   மறைத்து   தான்   ஓர்   அர்ச்சகர்   உருவில்   உள்ளே   நுழைந்தார் .  பரவையார்   இந்த   வேளையில்   தன்னை   தேடி   யார்   வருகிறார்   என்று   இந்த   வேளையில்   தன்னை   தேடிவந்த   காரணத்தை   அர்ச்சகர்   உருவில்   வந்த   ஈசனை   வினவினாள் .   அவர்   நான்   சொல்வதை   மறுக்காமல்   ஏற்பதானால்   சொல்கிறேன்   என்றார் .   அவளும்   சரியென்று   பட்டால்   தயங்காமல்   ஏற்கிறேன்.  என்று   பதில்   கூறினாள் .   அவர்   சுந்தரன்   உனக்காக   துடித்து   கொண்டிருக்கிறான் .  அவன்   செய்தது   தவறுதான்   என்றாலும்   மன்னித்து   ஏற்றுக்கொள்.  அவன்   உன்   நினைவாகவே   இருக்கிறான்   என்று   கூறினார்.   அதற்கு   பரவையார்   ''என்னை   நினைத்துக்கொண்டிருந்தால்   சங்கிலியாரை   எவ்வாறு    மணந்து   கொண்டு   ஆனந்தமாக   வாழ்ந்திருப்பார் .  அதன்  பிறகு   என்னிடம்   அவர்க்கு   என்ன   உரிமை   இருக்கிறது ''  என்று   பதில்   கேள்வி   எழுப்பினார் .        

No comments:

Post a Comment