பரவையார் மாளிகை அடைந்ததும் ஐயன் தேவர் முனிவர்களை மறைத்து தான் ஓர் அர்ச்சகர் உருவில் உள்ளே நுழைந்தார் . பரவையார் இந்த வேளையில் தன்னை தேடி யார் வருகிறார் என்று இந்த வேளையில் தன்னை தேடிவந்த காரணத்தை அர்ச்சகர் உருவில் வந்த ஈசனை வினவினாள் . அவர் நான் சொல்வதை மறுக்காமல் ஏற்பதானால் சொல்கிறேன் என்றார் . அவளும் சரியென்று பட்டால் தயங்காமல் ஏற்கிறேன். என்று பதில் கூறினாள் . அவர் சுந்தரன் உனக்காக துடித்து கொண்டிருக்கிறான் . அவன் செய்தது தவறுதான் என்றாலும் மன்னித்து ஏற்றுக்கொள். அவன் உன் நினைவாகவே இருக்கிறான் என்று கூறினார். அதற்கு பரவையார் ''என்னை நினைத்துக்கொண்டிருந்தால் சங்கிலியாரை எவ்வாறு மணந்து கொண்டு ஆனந்தமாக வாழ்ந்திருப்பார் . அதன் பிறகு என்னிடம் அவர்க்கு என்ன உரிமை இருக்கிறது '' என்று பதில் கேள்வி எழுப்பினார் .
No comments:
Post a Comment