Wednesday, 27 February 2019

இதற்கு   பிறகும்   சமணர்களுக்கு   தோல்வியை   ஒப்புக்கொள்ள   மனமில்லை .  ஈசன்   திருவிளையாடல் .  வைகை   ஆற்றில்   ஓலையை   விட்டு    பரிக்ஷிக்க   கோரினர் .  அப்போது    அமைச்சருக்கு   கோபம்   தாங்காமல்   இதில்   தோற்றால்   என்ன   தண்டனை   என்று   வினவினார் .  விதி   யாரை   விட்டது .   சமணர்கள்   'அரசன்   அவர்களை   கழுவில்    ஏற்றுவான்   என்று   கூறினர் .   அரசன்   வைகை    ஆற்று   கரையை   புடை   சூழ   சென்றடைந்தான் .   சமணர்கள்   முந்திக்கொண்டு    தங்கள்   ஓலையை   ஆற்றில்   இட்டனர் .   ஆற்று   வெள்ளத்தில்   அது   அடித்து   கொண்டு   போயிற்று .    சம்பந்தர்   வாழ்க   அந்தணர்   என்று பதிகத்தை   ஒரு   ஏட்டில்   எழுதி   ''எம்பெருமானே   முழுமுதற்கடவுள்   என்பது   உண்மையானால்   இந்த    ஏடு    கரை   சேரும்''  என்று   எழுதி   அதை   ஆற்றில்   இட்டார் .

No comments:

Post a Comment