இதற்கு பிறகும் சமணர்களுக்கு தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லை . ஈசன் திருவிளையாடல் . வைகை ஆற்றில் ஓலையை விட்டு பரிக்ஷிக்க கோரினர் . அப்போது அமைச்சருக்கு கோபம் தாங்காமல் இதில் தோற்றால் என்ன தண்டனை என்று வினவினார் . விதி யாரை விட்டது . சமணர்கள் 'அரசன் அவர்களை கழுவில் ஏற்றுவான் என்று கூறினர் . அரசன் வைகை ஆற்று கரையை புடை சூழ சென்றடைந்தான் . சமணர்கள் முந்திக்கொண்டு தங்கள் ஓலையை ஆற்றில் இட்டனர் . ஆற்று வெள்ளத்தில் அது அடித்து கொண்டு போயிற்று . சம்பந்தர் வாழ்க அந்தணர் என்று பதிகத்தை ஒரு ஏட்டில் எழுதி ''எம்பெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையானால் இந்த ஏடு கரை சேரும்'' என்று எழுதி அதை ஆற்றில் இட்டார் .
No comments:
Post a Comment