Tuesday, 12 February 2019

ஆலயம்   தொழுது   வெளியே   வந்த   சம்பந்தரை   குலச்சிறையார்   பல்லக்கை   வலம்   வந்து   அவர்   கால்களில்   விழுந்து    வணங்கினார் .  பிறகு   அரசி   வந்திருப்பதையும்   கூறினார் .  மங்கையர்க்கரசியார்   ஞானப்பிள்ளை   பாதங்களில்   விழுந்து   வணங்கினார் .   அம்மையை   தூக்கி   விட்டு   ஆலவாய்   ஈசன்   அருளால்   நல்லதே   நடைக்கும்   என்று   வாழ்த்தினார் .  பாண்டிய   நாடு    துயர்   நீங்கி   வாழ   தாங்கள்தான்   உதவ     வேண்டும் .  மன்னன்   சமணர்கள்   கைப்பாவையாகி   சைவம்   துறந்தான் .  தாங்கள்தான்   பாண்டிய    நாட்டில்   மீண்டும்      சைவம்   செழித்து   அரசனும்    சைவத்தை   தழுவி   நாடு   செழிக்க   செய்ய   வேண்டும்    என்று   வேண்டி   கொண்டாள் ..   சம்பந்தரும்    ஆலவாயான்   பேரருளால்   எல்லாம்   இனி தே   நடைபெறும்   என்று  வாழ்த்து   கூறினார் .   அரசியார்   பெரும்   நிம்மதி   அடைந்தார் .

No comments:

Post a Comment