Thursday, 14 February 2019

மன்னன்   அச்சமணர்களின்    வருகைக்கு   காரணம்   வினவினார் .  அதற்கு   அவர்கள்   தோணிபுரத்திலிருந்து   ஒரு   அந்தண   சிறுவன்   வந்திருக்கிறானாம் .  நிரம்ப   கற்றவனாம்.   அவனுக்கு   அமோக   வரவேற்பு   வழங்கப்பட்டதாம் .  மன்னன்   அதிக   சுவாரஸ்யம்   காட்டாமல்   அதற்கு  என்ன   செய்ய   வேண்டும் ?  என்று   கோபமாக   வினவினார் .   அதற்கு   அவர்கள்   நாங்கள்   எங்கள்   மந்திர   சக்தியால்   அவர்   தங்கியுள்ள   மடத்தை   தீப்பற்றி   எரிய   செய்கிறோம் .    அவன்   பயந்து   ஓடி   விடுவான் . என்றனர் .   அரசனும்   அதற்கு   சம்மதம்   அளித்தான் .  உடனே   காரியத்தில்   இறங்கினர்   சமணர்கள் .  மடத்திற்கு   எதிரில்   மறைவான   இடத்தில்   அமர்ந்து   கொண்டு   சமணர்கள்   மந்திரம்   ஜபிக்கலானார்கள் .   மடத்தில்   ஓதப்படும்   பஞ்சாக்ஷரத்தின்   முன்   அவர்கள்   மந்திரம்   எடுபடவில்லை .   அவர்கள்   முயற்சி   வீணாயிற்று .   நடுங்கி   ஓடிவந்தனர் .  அரசன்   காதில்   இந்த   விஷயம்   எட்டினால்   ஆபத்து   என்று   பயந்து   சில   ஆட்களை   நிறைய   பொன்   கொடுத்து   மடத்தை   எரிக்க   ஏற்பாடு   செய்தனர் .  

No comments:

Post a Comment