Thursday, 21 February 2019

குலச்சிறையார்   உடனே   கிளம்பி   சம்பந்தர்   தங்கியுள்ள   மடத்திற்கு   சென்றார் .   அங்கு   பிள்ளையை   கண்டதும்    அவர்   கண்கள்   நீரை    ஆறாய்   சொரிய   அவர்    காலில்   விழுந்தார் .     ஞானப்பிள்ளை   அவரை   தூக்கி   சமாதானம்   செய்தார் .     அமைச்சர்   அவரிடம்   'நேற்று   சமணர்களால்   தங்கள்   மடம்     எரிக்கப்பட்டதும்   மேலும்   தங்களை   கொல்லவும்    முயற்சி   நடந்ததும்   கேள்விப்பட்டு      அரசியாரும்    நானும்   துடித்து   போனோம் .   தாங்கள்   தப்பித்த    செய்தி    கேட்டதும்   கொஞ்சம்    நிம்மதி    அடைந்தோம் .   அதன்      எதிரொலி    மன்னன்   நோய்வாய்ப்பட்டு   மிக்க     அவதிக்கு   உள்ளாகி    இருக்கிறார்     என்று   நாங்கள்   நினைக்கிறோம் .    அதனால்   தங்கள்   கையால்   திருநீறு   பூசி    மன்னனை   குணப்படுத்த  வேண்டும் ,'   என்று    வேண்டினார் .     அவரு ம்   எம்பெருமான் அருள்   இருக்க   கவலை    வேண்டாம்    என்று    சமாதானம்   செய்தார் .

No comments:

Post a Comment