குலச்சிறையார் உடனே கிளம்பி சம்பந்தர் தங்கியுள்ள மடத்திற்கு சென்றார் . அங்கு பிள்ளையை கண்டதும் அவர் கண்கள் நீரை ஆறாய் சொரிய அவர் காலில் விழுந்தார் . ஞானப்பிள்ளை அவரை தூக்கி சமாதானம் செய்தார் . அமைச்சர் அவரிடம் 'நேற்று சமணர்களால் தங்கள் மடம் எரிக்கப்பட்டதும் மேலும் தங்களை கொல்லவும் முயற்சி நடந்ததும் கேள்விப்பட்டு அரசியாரும் நானும் துடித்து போனோம் . தாங்கள் தப்பித்த செய்தி கேட்டதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தோம் . அதன் எதிரொலி மன்னன் நோய்வாய்ப்பட்டு மிக்க அவதிக்கு உள்ளாகி இருக்கிறார் என்று நாங்கள் நினைக்கிறோம் . அதனால் தங்கள் கையால் திருநீறு பூசி மன்னனை குணப்படுத்த வேண்டும் ,' என்று வேண்டினார் . அவரு ம் எம்பெருமான் அருள் இருக்க கவலை வேண்டாம் என்று சமாதானம் செய்தார் .
No comments:
Post a Comment