Monday, 11 February 2019

சமணர்கள்   இரவு   துர்சொப்பனங்களை   கண்டனர் .  துர்சொப்பனங்களும்   துர்சகுனங்களும்   அவர்களை   ஆட்டிப்படைத்தன .   காரணம்   புரியாமல்   தடுமாறினார் .  அதே   சமயம்   பாண்டிய   அரசிக்கும்   மந்திரியாருக்கும்   பல   நற்சகுனங்கள்   தோன்றி    அவர்களுக்கு   நம்பிக்கை   ஊட்டின .  காரணம்   என்னவாக   இருக்கும்   என்று   யோசித்தனர் .  அப்போது   அவர்களுக்கு   காழிப்பிள்ளை   மதுரை   நெருங்கும்   செய்தி   கிட்டியது .  அவர்கள்   மகிழ்ச்சி   சொல்லில்   அடங்காது .    ஞானபாலுண்ட   பிள்ளை   மதுரை   நெருங்கி   விட்ட   செய்தி   கேட்டதும்   மகயற்கரசியார்   மந்திரியாரை   அழைத்து   சம்பந்த   பெருமானை   தக்க   மரியாதையுடன்   அழைத்துவர   ஆணையிட்டார் .   குலச்சிறையாரும்   அவ்வாறே   குறையின்றி   வரவேற்பதாக   கூறி   புறப்பட்டார் .   அடியார்கள்   கூட்டம்   திரண்டிருந்தது .  அவர்கள்   அவரை   வாழ்த்தி   எழுப்பிய   கோஷம்   வானை   முட்டியது .   சம்பந்தரும்   ஆலயம்   சென்று   ஆலவாய்   அண்ணலை   மனதார   தொழுது   வெளியே   வந்தார் .  

No comments:

Post a Comment