Wednesday, 13 February 2019

சம்பந்தப்பெருமான்   தம்   அடியார்களுடன்   அரசியார்    தங்களுக்காக   ஏற்பாடு   செய்திருந்த   மடத்திற்கு    எழுந்தருளினார் .   அரசியாரும்   மந்திரியாரும்   மனம்   நிம்மதி   அடைந்தவர்களா க    அரண்மனை   சென்றனர் .   அவர்   வருகை   சமணர்கள்     இடையே   பெரும்   கலக்கத்தை    உண்டாக்கியது .  அவர்கள்   சம்பந்தர்   பெருமையை   கேள்விப்பட்டிருக்கிறார்கள் .   அது   அவர்களுக்கு   பயத்தை   உண்டாக்கியது .         அவர்கள்   தங்கி   இருந்த   மடத்திலிருந்து   எழும்   வேத   ஒலியும்   வேள்வி   புகையும்   அவர்கள்   கலக்கத்தை     மேலும்    அதிகமாக்கியது .   அவர்கள்   அனைவரும்   கூடி   ஆலோசனை   செய்து   தங்கள்   மந்திர   சக்தியால்   மடத்தை   எரித்துவிட   முடிவு   செய்தனர் .  அதற்கு    மன்னருடைய   அனுமதி   பெற   எண்ணினர் .   எல்லோரும்   கூடி   மன்னரிடம்    சென்றனர் .  மன்னர்   அவர்களின்   வாடிய      முகத்தை   கண்டு   அவர்கள்   வருகையின்     காரணம்   வினவினார் .  

No comments:

Post a Comment