Friday, 22 February 2019

சம்பந்தர்   அமைச்சரை   சமாதானம்   செய்து   ஆலவாயான்   அருளால்   அரசரையும்   குணமாக்கி    சமணர்களையும்   வாதிட்டு      வெல்வேன்.  என்று   சொல்லி   ஆலயம்   சென்று   எம்பெருமானின்   ஆசி    பெற்று    கிளம்பினார் .    அரண்மனையை   அடைந்ததும்    அரசியார்    அவரை   மிக்க   அன்புடன்    வரவேற்று    அரசனிடம்   அழைத்து    சென்றார் .    அரசரிடம்    ஸ்வாமி    அவர்   வந்திருக்கிறார்   என்றதும்    அரசன்   தலையை   தூக்கி   அவரை   வணங்கி     வரவேண்டும்   என்று   வரவேற்று    பக்கத்திலிருந்த   பொற்பீடத்தை   காட்டி   அமரவேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார் .   சமணர்களுக்கு    அதை   கண்டதும்    பெரும்  பீதி    உண்டாயிற்று .   அரசன்  அவரை   தங்கள்   ஊர்   எது   என்று   வினவ    பிரமனுர்  வேணுபுரம்    என்று   பதிகம்   பாடி    விளக்கினார் .       

No comments:

Post a Comment