சம்பந்தர் ஒரே செய்யுள் பாடியதும் ஆலய கதவு முடிக்கொண்டது . மக்களுக்கு சங்கடம் நீங்கி ஆலயம் செல்ல மிக வசதியானது கண்டு அப்பரடிகளுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனாலும் அவர் மனம் நிலையில்லாமல் தவித்தது . தான் அத்தனை செய்யுள்கள் பாடும் வரை திறக்காத கதவு பிள்ளை ஒரு பாட்டு பாடியதும் மூடிக்கொண்டது அவரை மிக்க வேதனைக்கு உள்ளாக்கியது . தன் பக்தியில் குறை உள்ளதோ என்ற சஞ்சலம் அவரை வாட்டியது . இருந்தாலும் காழிப்பிள்ளை சின்னஞ்சிறு வயதில் வேதங்களை கற்று அதில் புலமை கண்டது அவருக்கு பிள்ளையின் மேன்மை புரிந்தது . இவ்வாறு அலைபாயும் மனதுடன் படுத்திருந்த அவரை ஈசன் தனக்கு இருவரில் பேதம் இல்லை என்பதை உணர்த்த இச்சை கொண்டார் . அவருடைய கனவில் தோன்றி யாம் திருவாய்முரில் இருப்போம் எம்மை தொடர்ந்து வரும்படி பணித்தார் . அப்பரும் எழுந்து வந்து வாயிலில் அவரை கண்டு அவரை பின் தொடர்ந்தார் .
No comments:
Post a Comment