Tuesday, 26 February 2019

அரசன்    தாம்   இத்தனை   நாட்கள்   அறியாமையால்    ஈசனை   மறந்து   பிற   சமயத்தை   நாடியதை   நினைத்து    வெட்கம்   அடைந்தார் .   சம்பந்தர்   கால்களில்    விழுந்து   வணங்கி   தன்னை   மன்னித்து   திருநீறு   அளிக்குமாறு   வேண்டினார் .   அரசியாரும்   குலச்சிறையாரும்    அடைந்த   மகிழ்ச்சி   சொல்ல   வார்த்தை   இல்லை .   இப்போது   சம்பந்தர்   சமண   தலைவர்களை    நோக்கி   அவர்கள்    கொள்கைகளை   விளக்குமாறு   கேட்டார் .  அரசன்   தன்   உடல்   உபாதையை   தீர்க்க   முடியாத   அவர்களிடம்   என்ன   விளக்கம்   தேவை ?   என்று   கூறினார் .   ஆனால்   சமணர்கள்   விடுவதாக   இல்லை .   அனல்   வாதம் செய்ய    முற்பட்டனர் .  அவர்கள்   தாம்  செய்யுள்   எழுதி    அனலில்   விடுவதாகவும்   சம்பந்தரும்   அவ்வாறு     செய்ய   வேண்டுமென்று     கூறினர் .

No comments:

Post a Comment