வாகீசப்பெருமானும் ஞானப்பிள்ளையும் இவ்வாறு ஈசனின் கொடையால் பொன் பெற்று மக்களின் பசியாற்றி பேரானந்தம் அடைந்தனர் . மக்களும் அவர்கள் சேவையால் மிக்க மகிழ்ந்து போற்றினர் . விரைவிலேயே மழை பொழிந்து நீர்நிலைகளில் தண்ணீர் நிரம்பி நிலைமை சீர் அடைந்தது . மக்கள் சகஜ நிலைக்கு வந்தவுடன் இருவரும் தங்கள் பக்தி பயணத்தை தொடங்கினர் . பல சிவாலயங்களை சேவித்து கொண்டு ஆரூரில் சில தினங்கள் தங்கி விட்டு திருமறைக்காட்டை அடைந்தனர் . அக்கோவிலில் வேதங்கள் பூசித்து மூடிய கதவுகள் திறக்க முடியாத காரணத்தால் மக்கள் பக்கத்து சிறிய வாயில் வழியாக எம்பெருமானை சேவிக்க வரவேண்டி இருந்தது . இக்கொடுமையை சகித்து கொள்ள முடியாத காழ்ப்பிள்ளை அப்பர டிகளை சேவித்து ''இது என்ன கொடுமை ? மக்கள் தடையின்றி செல்ல ஆலய கதவுகளை திறக்க செய்ய தாங்கள் வழி செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் .
No comments:
Post a Comment