Tuesday, 5 February 2019

திருமறைக்காட்டில்   கோபுர   பிரதான   வாயில்   திறந்து   மக்கள்  தடையின்றி   ஐயனை   தரிசிக்க   வழி   செய்யுமாறு   காழிப்பிள்ளையார்   வாகீசரை   வேண்ட   அவரும்   அதை   ஆமோதித்து   ''பண்ணின்   நேர்   மொழியாள்   உமை   பங்கரோ ''  எனும்   பதிகம்   பாடி   ஐயனை   கதவை   திறக்க   செய்ய   வேண்டினார் .   அவர்   பல   செய்யுள்கள்   பாடியும்   திறவாத   கதவு   இரக்கம்  ' ஒன்றிலீர் '   என்று   வருந்தி   பாடியதும்   கதவு   திறந்தது . மக்கள்   பேரானந்தம்   அடைந்து   அப்பரை   வாழ்த்  தினர் .  இருவரும்   மகிழ்ந்தனர் .   பிறகு   அப்பர்   பெருமான்   சம்பந்தரை   இவ்வாறு   கதவு   திறந்தே   வைப்பது   உசிதமில்லை   ஆகையால்   கதவு   மூடுவதற்கு   பாடும்படி     வேண்டினார் .  அவரும்   'சதுரம்   மறை '  எனும்   பதிகம்   பாடினார் .  ஆளுடைப்பிள்ளை   ஒரு   பதிகம்   பாடியதுமே   கதவு   மூடிக்கொண்டது .   மக்கள்   ஆரவாரம்   செய்து   கொண்டு    கோயிலில்   நுழைந்து   எம்பெருமானை   உளமார   தரிசித்தனர் .   

No comments:

Post a Comment