திருமறைக்காட்டில் கோபுர பிரதான வாயில் திறந்து மக்கள் தடையின்றி ஐயனை தரிசிக்க வழி செய்யுமாறு காழிப்பிள்ளையார் வாகீசரை வேண்ட அவரும் அதை ஆமோதித்து ''பண்ணின் நேர் மொழியாள் உமை பங்கரோ '' எனும் பதிகம் பாடி ஐயனை கதவை திறக்க செய்ய வேண்டினார் . அவர் பல செய்யுள்கள் பாடியும் திறவாத கதவு இரக்கம் ' ஒன்றிலீர் ' என்று வருந்தி பாடியதும் கதவு திறந்தது . மக்கள் பேரானந்தம் அடைந்து அப்பரை வாழ்த் தினர் . இருவரும் மகிழ்ந்தனர் . பிறகு அப்பர் பெருமான் சம்பந்தரை இவ்வாறு கதவு திறந்தே வைப்பது உசிதமில்லை ஆகையால் கதவு மூடுவதற்கு பாடும்படி வேண்டினார் . அவரும் 'சதுரம் மறை ' எனும் பதிகம் பாடினார் . ஆளுடைப்பிள்ளை ஒரு பதிகம் பாடியதுமே கதவு மூடிக்கொண்டது . மக்கள் ஆரவாரம் செய்து கொண்டு கோயிலில் நுழைந்து எம்பெருமானை உளமார தரிசித்தனர் .
No comments:
Post a Comment