Sunday, 10 February 2019

சம்பந்தர்   பாண்டிய   நாட்டு   தூதர்களிடம்   அரசியாரிடம்   தாம்   உடனே   வருவதாக   தெரிவிக்குமாறு   சொல்லி   அனுப்பினார் .   தூதர்களும்   மிக்க   மகிழ்ச்சியோடு   புறப்பட்டனர் .  பிள்ளையார்   வாகீசரிடம்   தாம்   சமண   ஆதிக்கத்திலிருந்து   பாண்டியநாட்டை   மீட்கும்   பொருட்டு     மதுரை  செல்ல   போவதை   வாகீசரிடம்   தெரிவித்தார் .   பெரியவர்   சமணர்களிடம்   தாம்   அனுபவித்த   கொடுமைகள   நினைவிற்கு     வர   திடுக்கிட்ட   தானும்   உடன்   வருவதாகவும்   கிரக   நிலை   சரியில்லாததால்   தனியே   செல்ல   வேண்டாம்   என்று   தடுத்தார்.   'வேயுறு   தோளிபங்கன் '  என்று    தொடங்கும்   பதிகத்தை   பாடி   காழிப்பிள்ளை   விடமுண்ட கண்டன்   துணை   இருக்க   பயம்   எதற்கு ?  என்று   அவரை   சமாதானம்   செய்து   பல்லக்கில்   ஏறி   கிளம்பினார் .  வழி   நெடுக   உள்ள   சிவாலயங்களில்   ஈசனை   துதித்தபடி   மதுரையை   நெருங்கினார் .  அப்போது   சமணர்கள்   பள்ளிகளில்   துர்சகுனங்கள்    பல  தோன்றின .

No comments:

Post a Comment