Friday, 8 February 2019

அப்பர்   அளவிலா   மகிழ்ச்சியுடன்   ஈசனை   பின்தொடர்ந்தார் .  ஐயன்   சிறிது   தூரம்   வாகீசர்   பின்தொடர   நடந்து   சென்று   பின்   ஒரு   ஆலயத்தில்   நுழைந்து   மறைந்து   போனார் .  இதனிடையில்   சம்பந்தர்   அப்பரடிகள்   திருவாய்மூர்   சென்ற   செய்தி   கேட்டு   அவரும்   அங்கு   வந்து   சேர்ந்தார் .   ஈசன்   இத்தனை   தூரம்   அழைத்து   வந்து   மறைந்தது   கண்டு   துக்கித்து   காழிப்பிள்ளை   வந்திருக்கிறார்   அவருக்கும்   தரிசனம்   கொடுக்க   எம்பிரானை   மனமுருக   வேண்ட   அவ்வாறே   அவர்   காட்சி   கொடுத்து   இருவரையும்   மகிழ   செய்தார் .  சம்பந் தர்     பெரியவருக்கு   மனதார   நன்றி   கூறி   அவர்   அழைப்பிற்கு   இசைந்து தான்   ஐயன்   தனக்கு   காட்சி   தந்தார்   என்று   மனதார   நன்றி  கூறினார் .

No comments:

Post a Comment