சம்பந்தர் விட்ட ஏடு வெள்ளத்தை எதிர்த்து வேகமாக சென்றது . அடியார்கள் மகிழ்ச்சி ஆரவாரம் வானை பிளந்தது . அதே சமயம் மற்றும் ஒரு அதிசயம் நிகழ்ந்தது . ''மன்னவன் ஓங்குக '' என்று ஐயன் பதிகத்தில் பாடியதால் அரசனின் கூன் வீழ்ந்த முதுகும் நிமிர்ந்தது . அரசனின் மகிழ்ச்சிக்கு எல்லை ஏது ? அவன் அமைச்சரை அழைத்து சம்பந்தர் இட்ட ஏட்டை பத்திரமாகவும் மரியாதையுடனும் எடுத்து வர பணித்தார் . அமைச்சரும் அவ்வாறே சென்று ஒரு ஆலயத்தின் பக்கத்தில் ஓலை கரை யில் ஒதுங்கி இருந்தது . அதுவும் ஐயனின் ஆணை படியே அருகிலேயே கரை ஏறியது அமைச்சருக்கு ஆச்சர்யத்தை அளித்தது . ஏடுகளை கண்களில் ஒற்றி க்கொண்டு ஆனந்தம் தாங்காமல் கூத்தாடினார் . பிறகு உள்ளே சென்று எம்பெருமானை தரிசித்து வணங்கி ஏட்டை தலையில் தயங்கியவாறே வந்து சேர்ந்தார் .
No comments:
Post a Comment