Friday, 1 March 2019

சம்பந்தர்   விட்ட ஏடு    வெள்ளத்தை   எதிர்த்து    வேகமாக   சென்றது .    அடியார்கள்   மகிழ்ச்சி    ஆரவாரம்   வானை    பிளந்தது .   அதே   சமயம்   மற்றும்   ஒரு   அதிசயம்   நிகழ்ந்தது .  ''மன்னவன்  ஓங்குக ''  என்று   ஐயன்   பதிகத்தில்   பாடியதால்   அரசனின்  கூன்   வீழ்ந்த   முதுகும்   நிமிர்ந்தது .   அரசனின்    மகிழ்ச்சிக்கு   எல்லை   ஏது ?   அவன்   அமைச்சரை   அழைத்து   சம்பந்தர்   இட்ட   ஏட்டை   பத்திரமாகவும்   மரியாதையுடனும்    எடுத்து   வர   பணித்தார் . அமைச்சரும்   அவ்வாறே    சென்று   ஒரு   ஆலயத்தின்    பக்கத்தில்   ஓலை    கரை யில்    ஒதுங்கி   இருந்தது .  அதுவும்   ஐயனின்   ஆணை படியே    அருகிலேயே   கரை   ஏறியது     அமைச்சருக்கு   ஆச்சர்யத்தை   அளித்தது .   ஏடுகளை   கண்களில்   ஒற்றி க்கொண்டு     ஆனந்தம்   தாங்காமல்   கூத்தாடினார் .   பிறகு   உள்ளே      சென்று   எம்பெருமானை   தரிசித்து    வணங்கி   ஏட்டை   தலையில்    தயங்கியவாறே   வந்து   சேர்ந்தார் .   

No comments:

Post a Comment