சம்பந்தர் பதிகம் பாடி அதை அரசன் ரசித்ததும் சமணர்களால் தாங்கி கொள்ள முடியவில்லை . அவர்கள் மயில் இறகை ஏந்திக்கொண்டு மந்திரங்கள் ஓதிக்கொண்டு அவருடைய இடப்பாகத்தை தாங்கள் குணப்படுத்துவதாக கிளம்பினார்கள் . அரசன் வேதனை அதிகமானது . அரசன் துடித்தான் . கோபமாக அவர்களை விரட்டி விட்டு சம்பந்தரை நோக்கி சுவாமி என்னால் பொறுக்க முடியவில்லை . நீங்கள் தயை செய்யுங்கள் என்று வேண்டினார் . 'மந்திரமாவது நீறு ' எனும் பதிகம் பாடி அரசரது வலது பாகத்தில் நீறு பூச வலது பாகம் பூர்ண குணமாகி இடது பக்கம் பின்னும் மோசமானது. அரசன் சம்பந்தரை வணங்கி 'ஐயனே உம் கருணையே கருணை ' என்று வணங்கி இடது பக்கத்தையும் குணமாக்க பணித்தார் . அவரும் அவ்வாறே செய்தார் .
No comments:
Post a Comment