Wednesday, 27 February 2019

ஞானப்பிள்ளையும்    தானும்   அவ்வாறே   செய்வதாக    கூறனார் .   அரசன்   சம்பந்தர்   ஒப்புக்கொண்டதால்   அவையோர்களை     கூட்டி   அங்கு   தீ   குண்டம்    கட்டி   அதில்   தீ   மூட்டுமாறு    ஆணை   இட்டார் .   அவ்வாறே   தீ   மூட்டப்பட்டது .   காழிப்பிள்ளை   தன்   ஓலை   சுவடிகளை   எடுத்து   அவற்றிலிருந்து   ஒரு   ஓலை   சுவடியை   எடுத்தார் .   அதில்   ''போகமார்ந்த    பூண்முலையாள் ''    என்ற   திருநள்ளாற்று   பதிகம் .   அதை   எடுத்து    நள்ளாறப்பனை   மனமுருக   வேண்டிக்கொண்டு   ஐயன்  மீது    பதிகம்   பாடிக்கொண்டே   அதை    தீயில்   இட்டார் .  என்ன   அதிசயம் !   தீ   அதை   தீண்டாமல்   சுற்றி   வந்தது..  சந்தோஷத்தில்   மக்கள்   ஆரவாரம்   வானை   எட்டியது .  அரசன்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தான் .  அவன்   சமணர்களை      நோக்க   அவர்கள்   தாங்களும்     ஒரு    ஓலையை    இட     அது   பஸ்மாமாகியது .   சம்பந்தர்    தம்    ஓலையை    கண்களில்     ஒற்றியபடி   எடுத்து    கொண்டார்.    மக்கள்   மிகுந்த   சநதோஷம்   அடைந்தனர் .

No comments:

Post a Comment