Tuesday, 30 April 2019

செங்காட்டங்குடி மேய   சிறுத்தொண்டர்க்கும்   அடியேன் |

சோழநாட்டில்   செங்காட்டங்குடி   என்று   ஓர்   ஊர் .  அங்கு   மாமாத்தியர்   குலத்தில்   பிறந்த   பரஞ்சோதி   என்பவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   ஆயுர்வேதம்   மற்றும்   வடமொழியிலும்   தேர்ச்சி   பெற்றவர் .  இது   தவிர   குதிரை   ஏற்றம்   வாள்  வித்தை   போன்ற   போர்   கலைகளிலும்   வல்லமை   பெற்றிருந்தார் .  எல்லாவற்றிற்கும்   மேலாக   அவர்   சிவபெருமானிடம்   அளவிலா   பக்தி   கொண்டவர் .  சிவனடியார்களை   அன்புடன்   நேசிப்பவர் . இத்தனை   பெருமை   வாய்ந்த   அவர்   பல்லவ   மன்னனை  கவர்ந்ததில்   ஆச்சர்யம்      ஏதும்   இல்லை .

No comments:

Post a Comment