யோகியார் மாடுகளை அவையவை இடங்களில் சேர்த்துவிட்டு ஒருமடத்தில் த்யானத்தில் அமர்ந்து விட்டார். மூலனின் மனைவி எவ்வளவு அழைத்தும் அவர் அசைவதாக இல்லை . அவள் ஊர்மக்களிடம் உதவி கேட்டு அழுதாள் . அவள்மேல் இரக்கம்கொண்டு மக்கள் அவரை அழைக்க சென்றனர் . ஆனால் அவர் நிலையை கண்டு அவனை த்யானத்திலிருந்து எழுப்புவது சாத்தியமில்லை என்று தெரிந்து கொண்டு மூலன் மனைவியை சமாதானம் செய்து அதுதான் விதி என்று ஏற்றுக்கொள்வது தவிர வேறு வழியில்லை என்று கூறினர். யோகியார் தன் உடலை ஒளித்து வைத்த இடத்தில் தேடினார் . அது காணாததால் அதுதான் விதி என்று முடிவு செய்து தாம் நந்திதேவரிடம் கற்ற ஆகமங்களை தமிழில் மக்களிடம் சேர்க்கவேண்டியது கடமை என்று முடிவு செய்து ஆவடுதுறை சென்று இறைவன் ஆலயத்தில் ஒரு மூலையில் அரச மரத்தின்கீழ் அமர்ந்து வருடத்திற்கு ஒரு பாட்டாக மூவாயிரம் பாடல்களை திருமந்திரம் என்று தொகுத்து உலகுக்கு ஈன்று பெரும் பேறு பெற்று பின் சிவபெருமானிடம் இரண்டற கலந்தார் . இவ்வாறு திருமந்திரம் எனும் பொக்கிஷம் நாம் பெற்றோம் .
No comments:
Post a Comment