Monday, 8 April 2019

கலிக்காமர்   மிக்க   வேதனைக்கு   உள்ளானார் .  அப்போது   ஈசன்   அவர்   கனவில்   தோன்றி   'அன்பனே   இந்நோய்   சாதாரணமாக    தீரக்கூடியது   அல்ல .   ஆரூரில்   உள்ள   என்   அன்பன்   வன்தொண்டனால்   மட்டுமே   தீர்க்க   முடியும் '  என்று   கூறினார் .  இதை   கேட்ட   கலிக்காமர்   மிக்க   வேதனையுடன்  'ஐயனே! இதென்ன   கொடுமை   பரம்பரையாக   உன்னையே   வழிப்பட்டு   வரும்   குடும்பத்தில்   வந்த   என்னை   வாட்டும்   நோயை   தீர்க்க   உன்னிடம்   வாதிட்ட    அந்த   வன்தொண்டன்   தான்   சிகிச்சை   செய்ய   வேண்டுமா ?  உன்னை   வீதியில்   அலையவிட்ட   அவனும்   ஒரு   தொண்டனா ?  அவன்   கையால்   குணமாகி   வாழ்வதை   விட   இந்த   உயிரை   விடுவதே   மேல் '  என்று   புல ம்பினார்.  ஈசன்   சுந்தரர்  முன்   தோன்றி   'என்   அன்பன்   கலிக்காமன்  நம்   திருஉள்ளத்தால்   சூலை   நோயினால்   வருந்துகிறான் .  அதை   தீர்த்து   வை '  என்றார் .

No comments:

Post a Comment