கலிக்காமர் மிக்க வேதனைக்கு உள்ளானார் . அப்போது ஈசன் அவர் கனவில் தோன்றி 'அன்பனே இந்நோய் சாதாரணமாக தீரக்கூடியது அல்ல . ஆரூரில் உள்ள என் அன்பன் வன்தொண்டனால் மட்டுமே தீர்க்க முடியும் ' என்று கூறினார் . இதை கேட்ட கலிக்காமர் மிக்க வேதனையுடன் 'ஐயனே! இதென்ன கொடுமை பரம்பரையாக உன்னையே வழிப்பட்டு வரும் குடும்பத்தில் வந்த என்னை வாட்டும் நோயை தீர்க்க உன்னிடம் வாதிட்ட அந்த வன்தொண்டன் தான் சிகிச்சை செய்ய வேண்டுமா ? உன்னை வீதியில் அலையவிட்ட அவனும் ஒரு தொண்டனா ? அவன் கையால் குணமாகி வாழ்வதை விட இந்த உயிரை விடுவதே மேல் ' என்று புல ம்பினார். ஈசன் சுந்தரர் முன் தோன்றி 'என் அன்பன் கலிக்காமன் நம் திருஉள்ளத்தால் சூலை நோயினால் வருந்துகிறான் . அதை தீர்த்து வை ' என்றார் .
No comments:
Post a Comment