Saturday, 6 April 2019

கலிக்காமருக்கு   நெஞ்சம்   ஆறவேயில்லை .  எவ்வாறு   ஐயனை   இவ்வாறு  காலத்  தேய   தெருவில்   நடக்க   வைப்பார்  .  இந்த   எண்ணம்   அவரை    வெகுவாக   வாட்டியது .   எல்லோரிடமும்   சொல்லி   சொல்லி   புலம்பினார் .    அவருக்கு   ஆறவேயில்லை .  அவரை   கொல்ல   வேண்டும்    என்ற   வெறி.  இதை   உணர்ந்த   சுந்தரர்   மிக்க   துயரம்      அடைந்தார் .  தினமும்   ஆரூர்   ஈசனிடம்   சொல்லி      மாய்ந்து   போனார் .  ஆரூரருக்கு   தன்   பக்தன்   படும்    துயரம்    பொறுக்கவில்லை .   சுந்தரர்   ஆரூரரிடம்   உள்ள   பெரும்   அன்பினால்   சலுகை   மிக   எடுத்துக்கொண்டு   வன்தொண்டர்   ஆனார் .  ஆனாலும்   அவருக்கு   ஈசன்   அடியார்களிடம்   மிக்க   மதிப்பு   உண்டு .   அவ்வாறு      இருக்க   தம் மீது   இப்படி   பழி   ஏற்பட்டதை   அவரால்   தாங்கிக்கொள்ளவே    முடியவில்லை .   ஐயனிடம்   புலம்பினார் .  ஐயன்   மனம்   இறங்கியது .  அவர்   தம்   பக்தர்களிடையே      ஏற்பட்ட   இந்த   பிணக்கை   நீக்க   எண்ணம்   கொண்டார் .  கலிக்காமருக்கு    சூலை   நோயை    வர   செய்தார் .  அவர்   நோயின்   வேதனையால்   மிக   நொந்து போனார் .  

No comments:

Post a Comment