Tuesday, 2 April 2019

பிள்ளையார்   நல்லூர் வருவதை     கேட்டு   ஊர்    மக்கள்   திரளாக   அவரை   தரிசிக்க   வந்தனர் .     ஊரெல்லாம்   அலங்கார   பந்தல்களாலும்   தோரணங்களால்     அலங்கரிக்க   பட்டது .    காழிப்பிள்ளை   நீராடி    புத்தாடை   அணிந்து மாப்பிள்ளை   கோலம்   தரித்து    வந்தார்.    நம்பியாண்டார்  நம்பியும்   அவர்   மனைவியும்   அவரை   ஈசனாக   பாவித்து   ஆசனத்தில்    அமரச்செய்து   பாலால்   கால்   அலம்பி   மரியாதை   செய்து   மகளை    கன்னியாதானம்   செய்தனர் .    நீலநக்கர்    நீலநக்கர்        வைதீக   சம்பிரதாயங்களை    செய்து   வைத்தார் .    திருமண   தம்பதிகள்    அக்கினியை   வலம்   வந்தனர் .   சம்பந்தர்   'இறைவா   இவளுடன்   சேர்ந்து   நான்   உன்   திருவடியை   அடையவே   விரும்புகிறேன் '  என்று   மனமுருக   பிரார்த்தித்தார் .      பிறகு      ஆலயம்    சென்றனர்  .  அங்கு   'நல்லூர்   பெருமணம் '    எனும்   பதிகம்  பாடி      வணங்கினார் .   அப்போது      அதிசயிக்க     வகையில்    பெரும்   ஜோதி    தோன்றியது .   ஒரு      அசரீரி   வாக்கு   'வந்திருந்த   விருந்தினர்   அனைவரையும்       அஜ்ஜோதியில்   புகுந்து    தன்னிடம்   வந்து   சேருமாறு   கூறியது .  எல்லோரும்   மகிழ் ச்சியுடன்   ஜோதியில்       கலந்தனர் .   பிறவி  பற்று   அறுந்தது .     பிறகு   தம்   மனைவி    கரம்   பற்றி     காதலாகி   கசிந்து   எனும்   பதிகம்   பாடி   ஜோதியில்   கலந்து ஈசனுள்   ஐக்கியமானார் .                  

No comments:

Post a Comment