Wednesday, 24 April 2019

அம்பரான்   சோமாசிமாறனுக்கும்   அடியேன் |
சோழ   நாட்டில்   திரு  அம்பர்   என்றொரு   ஊர் .  அங்கு 
சோமாசிமாறர்   என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களிடம்   மிகுந்த   பக்தி   கொண்டவர் .  அடியார்க்கு   அடியாராக   தம்மை  எண்ணிக்கொண்டு   அவர்களுக்கு  சேவை   செய்து   வந்தார் .  பஞ்சாக்ஷ்ரத்தை   சதா   ஓதிக்கொண்டிருப்பார் .   அடியார்களிடம்   எந்த   பேதமும்   பார்க்க  மாட்டார் .  எல்லோரையும்   சிவ   சொரூபமாகவே   பார்ப்பார் .   மலர்ந்த   முகத்தோடு   வரவேற்று   அமுது   படைத்து   மகிழ்விப்பார் .   தம்பிரான்   தோழனான   சுந்தரர்   பெருமையை   கேள்விப்பட்டு   அவர்மீது   அளவிலா   பக்தி   கொண்டு   ஆரூர்   சென்று    அவருக்கு   தொண்டுகள்   பல   புரிந்தார் .  முடிவில்   ஈசன்   திருவடி    அடைந்தார் .    

No comments:

Post a Comment