Thursday, 11 April 2019

நம்பிரான்   திருமூலன்   அடியார்க்கு   அடியேன் | 

இமய   மலையில்   கைலாசத்தில்   நந்திதேவரிடம்   ஆகமங்கள்   பயின்று   அவர்   அருள்   பெற்ற   யோகிகள்   பலர்   அதில்   ஒருவர்   அகத்தியரிடம்   கல்வி   பயில   தென்னாடு   நோக்கி   புறப்பட்டார் .   அவர்   கைலாயத்திலிருந்து   கேதாரம்    நேபாளம்   பசுபதிநாதர்   கோயில்   கங்கை   கரை   வந்து   காசி   விஸ்வநாதரையும்      சேவித்து   கொண்டு   தென்   திசை   நோக்கி   பயணமானார் .   ஸ்ரீசைலம்,  காளஹஸ்தி    முதலிய   தலங்களை   சேவித்து   கொண்டு   தில்லை   வந்தடைந்தார் .   அங்கு          அம்பலக்கூத்தனின்   ஆனந்த   நடனம்   கண்டு   களித்து     தென்திசை   நோக்கி   வந்தார் .      காவிரியில்   நீராடி   திருஆவடுதுறையை   அடைந்து   அங்கு   ஐயனை      சேவித்து   கொண்டு   பயணம்   தொடர்ந்தார் .   அ  வர்    வழியில்    கண்ட    காட்சி   அவர்   உள்ளத்தை   உருக்கியது .      

No comments:

Post a Comment