Thursday, 2 May 2019

பல்லவ   மன்னன்   பரஞ்சோதியை   மரியாதையுடன்   அழைத்து   பல்லவ   சேனைக்கு    தலைவனாக   பதவி   ஏற்றுக்கொள்ள   வேண்டிக்கொண்டார் .  பரஞ்சோதியும்   சம்மதித்து   அப்பதவியை   ஏற்றுக்கொண்டார் .   ஆனால்   அவர்   சிவத்தொண்டை   கைவிடவில்லை .  பழையபடியே    செவ்வனே   செய்து   வந்தார் .  இப்படி   இருக்கையில்    சாளுக்கர்களுடன்   பல்லவர்களுக்கு   போர்   மூண்டது .   பரஞ்சோதி   பல்லவ   படையை   நடத்தி   சென்று    வாதாபி    சேனையை     சின்னாபின்னமாக்கி    பெரும்  வெற்றி யை    பல்லவர்களுக்கு   தேடி   தந்தார் .  வாதாபியை   அழித்து   பெரும்    செல்வத்தை   பல்லவ     மன்னரிடம்   சமர்ப்பித்தான் .    மன்னன்   நரசிம்ம   பல்லவன்   அடைந்த   ஆனந்தத்திற்கு    அளவே   இல்லை .      இத்தனை   சாதுர்யமாக     வெற்றி         தேடி   தந்த   சேனாதிபதியை   கௌரவிக்க    மன்னன்   மிக்க    ஆவல்   கொண்டான்.      

No comments:

Post a Comment