Saturday, 30 March 2019

ஞானசம்பந்தர்   மயிலை   விட்டு   புறப்பட்டு   திருவான்மியூர்   சென்று   அங்கு   பாடி   துதித்து   கழுங்குன்றம்   சென்று   வேதகிரியை   வலம்   வந்து   கடைசியாக   தில்லை   அம்பலக்கூத்தனை   வணங்க   அங்கு   சென்றார் .  சிவபாதவிருதயர்   மகன்   சிதம்பரம்   வந்திருப்பதை   அறிந்து   அங்கு   சென்று   மகனை   பணிந்து    தோணிபுரம்   திரும்ப   அழைத்தார் .  அவரும்   ஆடவல்லானிடம்   வேண்டி   விடை   பெற்றுக்கொண்டு   ஊர்   திரும்பினார் .  தந்தைக்கு   மகனை   திருமணக்கோலத்தில்   காண   அவா   எழுந்தது .   சுற்றத்தாருடன்   கலந்து   பேசி   நம்பியாண்டார்   நம்பியின்   மகளை  ஏற்ற   வரனாக   தேர்ந்தெடுத்தார் .  சம்பந்தர்   முதலில்   மறுத்தாலும்  ஈசன்     சித்தம்   அதுவானால்   அப்படியே   நடக்கட்டும்   என்று   சம்மதித்தார் .     சிபாதவிருதயர்   சுற்றத்துடன்   நல்லூர்   சென்று   முறைப்படி   பெண் கேட்டு  மணம்   நிச்சயிக்க      விரும்பினார் .  

No comments:

Post a Comment