Saturday, 23 March 2019

திரு   கற்பகாம்பாள்   உடனுறை   கபாலீஸ்வரர்   கோவில்   கொண்டிருக்கும்   திருமயிலாப்பூரில்   வைசிய   குலத்தை   சேர்ந்த   சிவநேசன்   என்றொரு   வணிகர்   குடி   இருந்தார் .  அவர்   பெரும்   தனவான் .   அதே  அளவு   ஈசனிடம்   பெரும்   பக்தியும்   உடையவராக   இருந்தார் .   கபாலீஸ்வரர்   மீது  அளவு    கடந்த   பக்தி   உடையவராக   இருந்தார் .  சீர்காழி   செல்வர்   சம்பந்தரிடம்   பெரும்   மரியாதை   உடையவராக   இருந்தார் .  ஐயனின்   பேரருள்   பெற்ற   அவரை   பற்றிய   செய்திகள்   கேட்டு   புல்லரித்து   போவார் .  எல்லாம்   இருந்தும்    அவருக்கு   குழந்தை   பாக்கியம்   இல்லாத   குறை   இருந்தது .   ஊர்   பெரியோர்கள்   எல்லாம்    அவர்   மீது   இரக்கம்   கொண்டு   அவரை   மகேஸ்வர   பூஜை   செய்தால்   பலன்   கிடைக்குமென்று   அறிவுரை      குறினர் .  அவரும்   மிக்க   சிரத்தையுடன்   அப்பூஜையை    செய்தார் .  அப்பூஜை   பலனளித்தது .   அவர்   மனைவி    அழகான   பெண்   குழந்தையை    ஈன்றெடுத்தாள் .  பெற்றோர்   மகிழ்ச்சிக்கு   அளவில்லை .  அக்குழந்தைக்கு       பூம்பாவை   என்று   பெயரிட்டு   அருமை         பெருமையுடன்    வளர்த்தனர் .

No comments:

Post a Comment