திரு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோவில் கொண்டிருக்கும் திருமயிலாப்பூரில் வைசிய குலத்தை சேர்ந்த சிவநேசன் என்றொரு வணிகர் குடி இருந்தார் . அவர் பெரும் தனவான் . அதே அளவு ஈசனிடம் பெரும் பக்தியும் உடையவராக இருந்தார் . கபாலீஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி உடையவராக இருந்தார் . சீர்காழி செல்வர் சம்பந்தரிடம் பெரும் மரியாதை உடையவராக இருந்தார் . ஐயனின் பேரருள் பெற்ற அவரை பற்றிய செய்திகள் கேட்டு புல்லரித்து போவார் . எல்லாம் இருந்தும் அவருக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறை இருந்தது . ஊர் பெரியோர்கள் எல்லாம் அவர் மீது இரக்கம் கொண்டு அவரை மகேஸ்வர பூஜை செய்தால் பலன் கிடைக்குமென்று அறிவுரை குறினர் . அவரும் மிக்க சிரத்தையுடன் அப்பூஜையை செய்தார் . அப்பூஜை பலனளித்தது . அவர் மனைவி அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்தாள் . பெற்றோர் மகிழ்ச்சிக்கு அளவில்லை . அக்குழந்தைக்கு பூம்பாவை என்று பெயரிட்டு அருமை பெருமையுடன் வளர்த்தனர் .
No comments:
Post a Comment