Wednesday, 6 March 2019

சம்பந்தப்பெருமான்   இன்னும்   சில   தலங்களை   சேவித்துக்கொண்டு   குலச்சிறையார்   பிறந்த   ஊரான   மணமேல்குடி   சென்று    அங்கு   சேவித்து   கொண்டா ர் .    அதன்   பிறகு    அவர்   தன்   வழி    செல்ல   அனுமதி   கேட்டார் .   அரச   தம்பதிகளுக்கு   அவரை   பிரிய   மனமே   இல்லை .   தாங்களும்   கூட   வர வேண்டுமென்று     விரும்பினர்.   சம்பந்தர்   அவர்களை  தடுத்து    ராஜாங்க    காரியங்களை   விடுவது    சரியல்ல .  நீங்கள்   செவ்வனே   ஆட்சி   செய்து   மக்களுக்கு   நல்ல   வாழ்வு   கொடுத்து   சிவத்தொண்டு    புரிந்து   வாழ்வதையே   நான்   விரும்புகிறேன்  என்றார்  .    அரசனும்   அவர்    ஆணையை     ஏற்று   கொண்டு   அவரை   வழி    அனுப்பினார் .    அங்கிருந்து      கிளம்பிய   சம்பந்தர்   சில   தலங்களை   சேவித்து   கொண்டு   முள்ளி    வாய்க்காலை     அடைந்தார் .   அக்கரையில்    கொள்ளத்தூரை    அடைய   அவா .  வில்வவனேஸ்வரரை   சேவிக்க    ஆவல்   ஆனால்   வெள்ளம்  இரு    கரையிலும்   பெருகி   ஓடியது .   ஓடங்கள்   கரையில்   கட்டி   வைக்க    பட்டிருந்தன .   

No comments:

Post a Comment