சம்பந்தப்பெருமான் இன்னும் சில தலங்களை சேவித்துக்கொண்டு குலச்சிறையார் பிறந்த ஊரான மணமேல்குடி சென்று அங்கு சேவித்து கொண்டா ர் . அதன் பிறகு அவர் தன் வழி செல்ல அனுமதி கேட்டார் . அரச தம்பதிகளுக்கு அவரை பிரிய மனமே இல்லை . தாங்களும் கூட வர வேண்டுமென்று விரும்பினர். சம்பந்தர் அவர்களை தடுத்து ராஜாங்க காரியங்களை விடுவது சரியல்ல . நீங்கள் செவ்வனே ஆட்சி செய்து மக்களுக்கு நல்ல வாழ்வு கொடுத்து சிவத்தொண்டு புரிந்து வாழ்வதையே நான் விரும்புகிறேன் என்றார் . அரசனும் அவர் ஆணையை ஏற்று கொண்டு அவரை வழி அனுப்பினார் . அங்கிருந்து கிளம்பிய சம்பந்தர் சில தலங்களை சேவித்து கொண்டு முள்ளி வாய்க்காலை அடைந்தார் . அக்கரையில் கொள்ளத்தூரை அடைய அவா . வில்வவனேஸ்வரரை சேவிக்க ஆவல் ஆனால் வெள்ளம் இரு கரையிலும் பெருகி ஓடியது . ஓடங்கள் கரையில் கட்டி வைக்க பட்டிருந்தன .
No comments:
Post a Comment