மயிலையில் சம்பந்தர் எம்பெருமான் மீதுள்ள காதலால் உடனே ஆலயம் சென்று கபாலீஸ்வரரை கண்குளிர தரிசித்து பதிகங்கள் பாடி மகிழ்ந்தார் . பிறகு சிவநேசரை அழைத்து பூம்பாவை அஸ்தி வைத்துள்ள குடத்தை எடுத்துவர பணித்தார் . ஆனந்தம் தாங்காமல் சிவநேசர் மாளிகை சென்று கன்னிமாடத்திலிருந்து அக்குடத்தை எடுத்து வந்து சிவிகையில் ஏற்றி மேளதாளத்துடன் எடுத்து வந்தார் . அதற்குள் இந்த செய்தி ஊரில் பரவி மக்கள் கூட்டம் கோவிலை அடைந்தனர் . குடத்தை சம்பந்தப்பெருமானிடம் கொடுத்து சிவநேசர் வணங்கினார் . கபாலீச்சரம் அமர்ந்தானை சம்பந்தர் மனமுருக வேண்டிக்கொண்டு மட்டிட்ட ' புன்னையன் ' எனும் பதிகம் பாடி உத்திராபல்கணத்தார் செய்யும் திருக்கோலங்களை விவரித்து இவைகளை காணாமல் அவச ரமாக போனாயோ பூம்பாவாய் என்று அவைகளை விவரித்து பாடினார் .
No comments:
Post a Comment