சீர்காழியிலிருந்து கிளம்பிய சம்பந்தர் முதலில் தில்லை சென்று நடராஜ பெருமானை கண்குளிர தரிசித்து கொண்டார் . பிறகு சமணர்களால் கல்லை கட்டி கடலில் வீசப்பட்ட அப்பர் பெருமானை சிறிதும் காயமின்றி கரை சேர்த்த திருப்பாதிரிப்புலியூர் ஈசனை சேவித்துக்கொண்டு அப்பரேடிகளை நோய் தீர்த்து நாவுக்கரசர் எனும் பெயர் சுட்டி பாடவைத்த அண்ணலை திருவதிகை விரட்டானேஸ்வரரை நன்றியுடன் வணங்கிக்கொண்டார் . நாரணனும் பிரமனும் தேடி அடி முடி காண முடியாத தீ பிழம்பாக காட்சி தந்து பிறகு அவர்களுக்கு அருளிய தலமான திருவண்ணாமலை சென்று ''உண்ணாமுலை உமையாளொடும் '' எனும் பதிகம் பாடி மகிழ்ந்தார் . பிறகு வேதங்கள் புசித்த வேதநாயகர் குடிகொண்டிருக்கும் தி ருவோத்தூர் சென்றார் . அங்கு மக்கள் மகிழ்ச்சியுடன் பெரும் வரவேற்பு அளித்தனர் . நெகிழ்ந்து போனார் காழிப்பெருமான் . அங்கு சேவிக்கும்போது ஒரு பக்தர் தன் குறையை கூறினார் . அவர் '' ஐயனுக்காக பனை மரங்களை வளர்த்தேன் . ஆனால் என்ன காரணமோ எல்லாம் ஆண் பனையாக குலை தள்ளவே இல்லை . சமணர்களின் பெரும் கேலிக்கு ஆளாகி விட்டேன் '' என்று கூறி வருந்தினார் . உடனே சம்பந்தர் ஐயனை மனதார வேண்டி ''புத்தேர்ந்தாயின '' எனும் பதிகம் பாடினார் . என்ன அதிசயம் . இறைவன் அருளால் எல்லா மரங்களும் குலை தள்ளின .
No comments:
Post a Comment