ஆண் பனைகள் குலை தள்ளிய இப்பெரும் அதிசயம் மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது . ஈசனுக்கு சம்பந்தர் பால் உள்ள ஈடு இணை இல்லாத இப்பாசத்தை கண்ட மக்கள் அசந்து போனார்கள் . அதிசயத்தில் பேச்சற்று நின்றார்கள் . சமணர்கள் இதை கண்டபின் மலைத்துப்போய் சைவத்திற்கு மாறினர் அல்லது ஊரைவிட்டு ஓடினர் . பின்னர் சம்பந்தர் பல தலங்களை சேவித்துக்கொண்டு காஞ்சி மாநகர் வந்து கச்சி ஏகம்பனை பதிகங்கள் பாடி சேவித்து மகிழ்ந்தார் .பிறகு காரைக்கால் சென்றார் . புனிதவதி அம்மையார் கால் தரையில் படைக்கூ டாதென்று தலையால் நடந்த அப்புனித இடத்தை கால்பட நடக்க விரும்பாத காழிப்பிள்ளை வெளியே தங்கி மனதார துதித்தார் . ஈசன் தன் அன்பு மகன் தன்னை பாடாது வெளியே இருப்பது சகிக்காமல் இரவில் அவர் கனவில் தோன்றி ;சம்பந்தா என்னை பாட மறந்தாயோ ' என்று வினவினார். திடுக்கிட்ட சம்பந்தர் ஐயனின் அன்பு கண்டு நெகிழ்ந்து நெக்குருகி வெளியிலுருந்தே பதிகங்கள் பாடினார் .
No comments:
Post a Comment