Wednesday, 20 March 2019

ஆண்   பனைகள்   குலை   தள்ளிய   இப்பெரும்   அதிசயம்   மக்களை   பரவசத்தில்   ஆழ்த்தியது .   ஈசனுக்கு   சம்பந்தர் பால்    உள்ள   ஈடு   இணை   இல்லாத   இப்பாசத்தை   கண்ட   மக்கள்   அசந்து    போனார்கள் .   அதிசயத்தில்   பேச்சற்று   நின்றார்கள் .   சமணர்கள்   இதை   கண்டபின்   மலைத்துப்போய்    சைவத்திற்கு    மாறினர்   அல்லது   ஊரைவிட்டு   ஓடினர் . பின்னர்    சம்பந்தர்   பல    தலங்களை   சேவித்துக்கொண்டு    காஞ்சி   மாநகர்   வந்து   கச்சி   ஏகம்பனை   பதிகங்கள்    பாடி   சேவித்து   மகிழ்ந்தார் .பிறகு   காரைக்கால்   சென்றார் .  புனிதவதி   அம்மையார்   கால்   தரையில்   படைக்கூ டாதென்று   தலையால்   நடந்த   அப்புனித   இடத்தை   கால்பட   நடக்க   விரும்பாத   காழிப்பிள்ளை   வெளியே   தங்கி   மனதார    துதித்தார் . ஈசன்   தன்   அன்பு   மகன்    தன்னை   பாடாது   வெளியே   இருப்பது   சகிக்காமல்   இரவில்   அவர்    கனவில்     தோன்றி   ;சம்பந்தா   என்னை   பாட   மறந்தாயோ '   என்று   வினவினார்.   திடுக்கிட்ட   சம்பந்தர்   ஐயனின்   அன்பு கண்டு    நெகிழ்ந்து   நெக்குருகி   வெளியிலுருந்தே   பதிகங்கள்   பாடினார் .

No comments:

Post a Comment