சம்பந்தர் கபாலீச்சரம் ஐயனுக்கு நடக்கும் ஒவ்வொரு திருருவிழாவையும் விவரித்து இவற்றை எல்லாம் காணாமல் இவ்வளவு அவசரமாக போவாயோ பூம்பாவாய் என்று ஒவ்வொரு திருவிழாவையும் வர்ணித்து கொண்டே போனார் . அவர் பாட பாட குடத்தில் எலும்புகள் வளர ஆரம்பித்தன . அவர் பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்து கொண்டு பூம்பாவை வெளியே வந்து சம்பந்தர் கால்களில் விழுந்து வணங்கினாள் . மக்களின் ஹர ஹர எனும் கோஷம் வானை எட்டியது . சிவநேசர் எல்லை இல்லா ஆனந்தம் அடைந்தார் . அவர் தம் மகளை சமபந்தருக்காகவே வளர்த்ததாக கூறி அவளை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார் . ஆனால் சம்பந்தர் தன்னால் உயிர் பெற்ற அவள் தன் மகளுக்கு சமான மானவள் என்று கூறி எம்பெருமானிடம் பக்தி கொண்ட நல்ல மாப்பிள்ளையாக பார்த்து மணமுடிக்குமாறு கூறினார். அவரும் சம்மதித்தார் . ஆனால் பூம்பாவை எம்பெருமான் சேவைக்கே அர்ப்பணித்து கொள்ள விரும்புவதாகவும் மணம் செய்து கொள்ள விருப்பமில்லை , என்று கூறி மறுத்து விட்டாள் .
No comments:
Post a Comment