Friday, 29 March 2019

சம்பந்தர்   கபாலீச்சரம்   ஐயனுக்கு   நடக்கும்   ஒவ்வொரு   திருருவிழாவையும்    விவரித்து   இவற்றை   எல்லாம்   காணாமல்    இவ்வளவு    அவசரமாக     போவாயோ   பூம்பாவாய்   என்று   ஒவ்வொரு   திருவிழாவையும்        வர்ணித்து   கொண்டே   போனார் .   அவர்   பாட  பாட   குடத்தில்   எலும்புகள்   வளர   ஆரம்பித்தன .  அவர்   பதிகம்   பாடி   முடித்ததும்   குடத்தை   உடைத்து   கொண்டு   பூம்பாவை   வெளியே   வந்து   சம்பந்தர்   கால்களில்   விழுந்து   வணங்கினாள் .  மக்களின்   ஹர ஹர   எனும்   கோஷம்   வானை   எட்டியது .   சிவநேசர்   எல்லை   இல்லா   ஆனந்தம்   அடைந்தார் .  அவர்   தம்   மகளை   சமபந்தருக்காகவே   வளர்த்ததாக   கூறி   அவளை   ஏற்றுக்கொள்ளும்படி   வேண்டினார் .   ஆனால்  சம்பந்தர்   தன்னால்   உயிர்   பெற்ற   அவள்   தன்   மகளுக்கு   சமான மானவள்         என்று   கூறி      எம்பெருமானிடம்   பக்தி   கொண்ட     நல்ல   மாப்பிள்ளையாக     பார்த்து   மணமுடிக்குமாறு   கூறினார்.   அவரும்  சம்மதித்தார் .  ஆனால்   பூம்பாவை     எம்பெருமான்   சேவைக்கே   அர்ப்பணித்து    கொள்ள   விரும்புவதாகவும்   மணம்    செய்து  கொள்ள   விருப்பமில்லை ,  என்று   கூறி   மறுத்து   விட்டாள் .   

No comments:

Post a Comment