Tuesday, 5 March 2019

சம்பந்தர்   தந்தையுடன்   மகிழ்ச்சியுட ன்   இருந்தார் .  அவருக்கு   தான்   வந்த   நோக்கம்   நிறைவேறியவுடன்   பாண்டியநாட்டில்   தங்குவதில்   விருப்பம்   இல்லை .   இன்னும்   தொண்டை   மண்டலத்திலுள்ள   சிவஸ்தலங்களை   சேவிக்க   மனம்     விழைந்தது .  அவர்    பாண்டிய   மன்னனிடமும்   அரசியிடமும்   விடை   பெற்றுக்கொள்ள   சென்றார் .  அவர்களுக்கு   சம்பந்தரை   பிரிய   மனமே   இல்லை .  ஆனாலும்    அவர்  ஞாயமான   கோரிக்கையை   நிராகரிக்க   இயலவில்லை .  சம்பந்தர்   அவர்களை   சமாதானம்   செய்து   பாண்டிய   நாட்டில்   உள்ள   சிவாலயங்களை   தன்னுடன்   வந்து   சேவித்து   பிறகு   தனக்கு   விடை   அளிக்குமாறு   கேட்டுக்கொண்டார் .  அவர்களும்   மகிழ்ச்சியுடன்   சம்மதம்   தெரிவித்தனர் .  திருப்பரங்குன்றம்   திருநெல்வேலி   இன்னும்   பல   தலங்களை   சேவித்து   கொண்டு   சேதுக்கரை   அடைந்து   ராமபிரான்   வணங்கிய   எம்பெருமானையும்   வணங்கி   அங்கிருந்த  படியே  இலங்கையில்   திரிகோணமலையையும்   திருக்கேதீச்சரத்தையும்    வணங்கி   கொண்டார் .    

No comments:

Post a Comment