Monday, 4 March 2019

சீர்காழியில்   சிவபாதவிருதயருக்கு    தன்   சின்னஞ்சிறு   மகன்    சமணர்களை   எதிர்த்து   வாதிட   பாண்டியநாடு   சென்ற   செய்தி   கேட்ட   நாள்   முதலாக   இருப்பு   கொள்ளவில்லை .      அப்பர்   பெருமான்   சமணர்களிடம்   அவர்    அனுபவித்த   கொடுமையான   தண்டனைகளை   கேட்டிருப்பதால்   அவர்   மனம்   பட்ட     வேதனை   சொல்லில்   அடங்காது .   அவர்   உடனே   புறப்பட்டு   மதுரையை   அடைந்து   சம்பந்தர்   தங்கியுள்ள   மடத்தை   வந்தடைந்தார் .   அங்கு   மகனை   நலமாக   கண்டதும்   அவர்   அடைந்த   நிம்மதி   சொல்லில்    அடங்காது.   மகனை   அணைத்து   கொண்டு   கண்ணீர்   சொரிந்தார் .   மகன்   ''  தோணியப்பர்   துணை   இருக்க   கவலை   எதற்கு ?  என்று   சொல்லி  '  மண்ணில்   நல்ல   வண்ணம் '  எனும்   பதிகம்   பாடி   தந்தையை    தேற்றினார் .

No comments:

Post a Comment