சீர்காழியில் சிவபாதவிருதயருக்கு தன் சின்னஞ்சிறு மகன் சமணர்களை எதிர்த்து வாதிட பாண்டியநாடு சென்ற செய்தி கேட்ட நாள் முதலாக இருப்பு கொள்ளவில்லை . அப்பர் பெருமான் சமணர்களிடம் அவர் அனுபவித்த கொடுமையான தண்டனைகளை கேட்டிருப்பதால் அவர் மனம் பட்ட வேதனை சொல்லில் அடங்காது . அவர் உடனே புறப்பட்டு மதுரையை அடைந்து சம்பந்தர் தங்கியுள்ள மடத்தை வந்தடைந்தார் . அங்கு மகனை நலமாக கண்டதும் அவர் அடைந்த நிம்மதி சொல்லில் அடங்காது. மகனை அணைத்து கொண்டு கண்ணீர் சொரிந்தார் . மகன் '' தோணியப்பர் துணை இருக்க கவலை எதற்கு ? என்று சொல்லி ' மண்ணில் நல்ல வண்ணம் ' எனும் பதிகம் பாடி தந்தையை தேற்றினார் .
No comments:
Post a Comment