Wednesday, 6 March 2019

சம்பந்தருக்கு   வில்லவனேஸ்வரரை   காண   வெள்ளம்   வடியும்   வரை   காக்க   பொறுமை   இல்லை.   கட்டி   வைத்திருந்த   ஓடம்   ஒன்றை    அவிழ்த்து   அதில்   அடியார்களை    அமர   செய்தார் .   தானும்   ஏறி   அமர்ந்தார் .   ஐயனை   மனமார   துதித்து   பதிகம்   பாடினார் .   செல்வ   மகன்   கேட்டு      மறுப்பாரா     தந்தை ?  அவன்   திருவருளால்   ஓடம்   சலனமில்லாமல்    மிதந்து   அக்கரை   சேர்ந்தது .  எல்லோரும்   ஆலயம்   சென்று    ஈசனை   மனமார    துதித்தனர் .   அங்கேயே   சில    நாட்கள்   தங்கி ஈசனை   துதித்தார் .   அப்போது   அவருக்கு   தீயிலிட்டபோது   ஆலவாயில்   தன்   ஏட்டை   கருகாமல்   காப்பாற்றிய     திருநள்ளாறப்பன்   நினைவு   வர   உடனே   அவரை   சேவித்து   தனது   மனமார   நன்றி   தெரிவிக்க   பேரவா   எழுந்தது .  உடனே   கிளம்பி திருநள்ளாறு       அடைந்து   அவரை   மனமுருக   தொழுதார் .

No comments:

Post a Comment